எது உண்மை?
எது பொய்மை?
எதுவுமே புரியவில்லை....!

எது காதல்!
எது ஈர்ப்பு!
அதுவும் எனக்கு புரியவில்லை....!

உண்மைக் காதல் ஒருமுறை என்றார்கள்-அது
அது முதலா?இடையிலா?முடிவிலா?
இதற்க்கு யாரிடமும் பதிலில்லை...!

ஒரு இதயம் வென்றவனுக்கு-அதுதான்
உண்மை! உயிர்! வாழ்க்கை...
பல இதயம் பார்த்தவனுக்கு-எதுதான்?
உண்மை! உயிர்! வாழ்க்கை...???

காரணம்...
பல இதயம் பார்த்தவன் பகுத்தறிவான்-ஆனால்
ஒரு இதயம் பார்த்தவன் என்ன செய்வான்???

வெளிப்படியாக சிலர்...
இதுதான் முதல் காதல் எனச்சொல்ல
முயற்சிப்பதில்லை-அனால்
இதுதான் கடைசிக் காதல் எனச்சொல்லவும்
முடிவதுமில்லை...! ஏன்?

ஆனால் அந்த நொடிகளின்
அன்பு! தவிப்பு! கண்ணீர்!பரிசம்!பார்வை!..etc
உண்மையானவை...
அதுதான் உண்மை!
இதை மனச்சாட்சி உள்ள எவரும்
மறுதலிக்க மாட்டார்கள்...

பறவைகள் அப்படி இல்லை...
மிருகங்களும் அப்படி இல்லை-ஏன்
மனிதன் மட்டும் இப்படி?

பறவைகள்!
பறவையாக வாழுகிறது!
மிருகங்கள்!
மிருகங்களாக வாழுகிறது!
மனிதன்????????????????

எவர்கையிளுமில்லை பதில்!
இதற்கு காலத்திடமே பதில்...

- யாழ் சங்கர்